Flash News...

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்,நாகை நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...

வியாழன், 29 செப்டம்பர், 2011

மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் (நாகூர்)


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளை சார்பாக கடந்த 25-09-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செயலாளர் சகோ.கோவை R.ரஹ்மத்துல்லாஹ் அவர்களும் சகோ.அல்தாப் ஹுசைன் அவர்களும் உரையாற்றினர்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்,

(நன்றி - TNTJ.Net)

திங்கள், 12 செப்டம்பர், 2011

நாகப்பட்டிணம் கிளையில் ரூபாய் 45150 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 261 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 45150 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

நாகப்பட்டிணம் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

வியாழன், 8 செப்டம்பர், 2011

நோன்பு பெருநாள் (திடல்) தொழுகை நாகூர் 31-8-201

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்! ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

திங்கள், 28 மார்ச், 2011

நாகை மர்க்கஸில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்

இன்ஷா அல்லாஹ்  வருகிற ஏப்ரல் 3ம் தேதி நாகை மர்க்கஸில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைபெற உள்ளது, சகோதரர் அப்துந்நாசிர் அவர்கள் உங்கள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்கள். சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு  பயன் பெருமாறு அன்புடன்  கேட்டு கொள்கிறோம்

புதன், 23 மார்ச், 2011

TNTJ அவசரப் மாநில பொதுக்குழு 26-3-11 சனிக்கிழமை கூடுகிறது

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, முஸ்லிம் சமுதாயத்துக்கு நன்மை அளிக்கும் என்பதைப் பற்றி சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் ஆய்வு செய்யப்பட்டது.
தேர்தல் அறிக்கைகளை கட்சிகள் வெளியிடாததாலும் கூட்டணிகள் முடிவாகாததாலும் அப்போது முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்படவில்லை.
இதன் பின்னர் நடத்தப்பட்ட மாநில செயற்குழுவின் போதும் அரசியல் நிலைமை தெளிவாகாமல் இருந்தது. ஆனால் தற்போது கூட்டணிகள் உறுதி செய்யப்பட்டு விட்டன. வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.
மேலும் தேர்தல் அறிக்கையும் பெரும்பாலும் வெளியிடப்பட்டு விட்டன. தேர்தல் குறித்து முடிவு செய்ய ஏற்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் வருகின்ற 26-3-11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை இம்பீரியல் ஹால் – எழும்பூர்- இல் மாநில அவசரப் பொதுக்குழு கூடுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது இதையே அழைப்பாக ஏற்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மாநிலப் பொதுச் சேயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

 நன்றி TNTJ.Net 

திங்கள், 7 பிப்ரவரி, 2011

நாகை மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்துடன் காரைக்கால் துறைமுகம் மற்றும் அரசு தரப்பு பேச்சு வார்த்தை...



 காரைக்கால் (வாஞ்சூர்) துறைமுகம் மற்றும் அரசு தரப்பு பேச்சுவார்த்தையில் நிலக்கரியால் ஏற்படும் சுற்றுபுற சூழல் பாதிப்பை தடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து  போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கபட்டுள்ளது (Tntj Nagai South) 

வியாழன், 3 பிப்ரவரி, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காரைக்கால் (வாஞ்சூர்) துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி  செய்யபடும் நிலக்கரி காற்றில்  கலந்து நாகூர்  பகுதி சுற்று புற சூழலை பாதிப்பதை கண்டித்து மாபெரும் பேரணி  & கண்டன ஆர்ப்பாட்டம்

இன்ஷா அல்லாஹ் 8-02-11 செவ்வாய்கிழமை அன்று காலை 11 மணி அளவில்  பேரணி நாகூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, சுகாதார சீர்கேட்டை கண்டித்து குரல் கொடுக்க சகோதர, சகோதரிகள் அனைவரும்  வருக என அன்புடன் அழைக்கிறது
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகூர் கிளை (நாகை தெற்கு மாவட்டம்)

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழு

2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்ததாவது:
முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
3.5 சதவிகிதம் என்பது போதுமானதல்ல. எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல்,  அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று கூறினார்.
மேலும் பல பொதுக்குழு தீர்மாணங்கள் குறித்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். நன்றி tntj.net

வெள்ளி, 28 ஜனவரி, 2011

நாகையில் ரூபாய் 7810 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகப்பட்டிணம் மற்றும் நாகூர் கிளை சார்பாக கடந்த 7-1-11 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 7810 வழங்கப்பட்டது.

நன்றி tntj.net

வியாழன், 13 ஜனவரி, 2011

திட்டச்சேரி கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரி கிளையில் கடந்த 9-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஜாஃபர் சாதிக் உரையாற்றினார்கள்.பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

திட்டச்சேரியில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் திட்டச்சேரியில் கடந்த 2-1-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் இப்ராஹீம் உமரி அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிறக்கும் ஜனவரி 27 போராட்டம் குறித்து தினத்தந்தி (தஞ்சாவூர் பதிப்பு) பத்திரிக்கையில் கடந்த 7-1-11 அன்று செய்தி வெளியாகியுள்ளது. போராட்டக்குழு தலைவர் சைபுல்லாஹ்ஹாஜா அவர்கள் நாகூரில் அளித்த பேட்டி இதில் இடம் பெற்றுள்ளது.